47,000 பேர் தமிழில் தோல்வி - தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!

Update: 2022-06-21 05:13 GMT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதிகப்படியாக கணிதத்தில் 83 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

தமிழகத்தில் மட்டும் பத்தாம் வகுப்பு தேர்வில் சுமார் 9.12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் தமிழில் மட்டும் திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா மட்டும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும், ஆங்கிலம் 45, கணிதம் 2,186, அறிவியல் 3,841, சமூக அறிவியல் 1,009 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், 5.16 சதவீதம் பேர் 37 ஆயிரம் மாணவர்கள், 10 ஆயிரம் மாணவியர் என்று 47 ஆயிரம் பேர் தாய்மொழியான தமிழில் தோல்வி அடைந்திருப்பது ஆசிரியர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News