சென்னை-மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டம் !

சென்னை, மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Update: 2021-09-13 08:39 GMT

சென்னை, மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு போடி, தேனி, மதுரை இடையே தொடங்கிய அகல ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைந்த உடன் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல், பழனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த பின்னர் சென்னையில் இருந்து பழனிக்கு ரயில்கள் இயக்கப்படும். மேலும், தேனி, இடையேயான புதிய ரயில் சேவையை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்ட மக்கள் சென்னை நகரத்திற்கு எளிதாக சென்று வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: News 7

https://news7tamil.live/chennai-madurai-train-to-be-extended-to-bodi.html

Tags:    

Similar News