நெருக்கமான புகைப்படம்.. நெல்லையில் நாடக காதலால் பெண்ணின் வாழ்க்கை நாசம்.!
நெருக்கமான புகைப்படம்.. நெல்லையில் நாடக காதலால் பெண்ணின் வாழ்க்கை நாசம்.!
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் பறித்த இரண்டு கொத்தனார்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாடக காதல் எப்படி எல்லாம் நடைபெறும் என்று சமீபத்தில் வெளியான திரௌபதி படம் உணர்த்தியது. ஆனாலும் பெண்கள் திருந்திய பாடில்லை.
நெல்லை மாவட்டம், முக்கூடலைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முந்தைய காதலனால் தனது இல்லற வாழ்க்கை தற்போது நாசம்மாகிவிட்டதாக சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப்பிடம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
முக்கூடல் அடுத்த கண்டப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் சாலமன் என்பவருடன் அந்த பெண் திருமணத்துக்கு முன்னதாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகி வந்துள்ளார் சாலமோன் என்பவர். இருவரும் நெருங்கி பழகி வந்தபோது ஆபாசமான புகைப்படங்களை எடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அப்போது சாலமோன் மவுனமாக இருந்து வந்துள்ளார். ஒரு சில மாதங்கள் கழித்து நெருக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறிக்க தொடங்கியுள்ளான்.
பணம் இல்லாதபோது அந்த பெண்ணிடம் கம்மல், செயின் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் இதுபற்றி அறிந்த சாலமனின் நண்பர்களான ஜான்சன், மனோ சேட் ஆகியோர்களும் வீடியோ மற்றும் புகைப்படங்களைக் காட்டி அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில், மனைவியின் நடத்தை மீது அவரது கணவன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னரும் விடாமல் சாலமன் நண்பர்கள் அப்பெண்ணை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.