மத்திய அரசு உத்தரவா? திடீரென்று டெல்லிக்கு பறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

Update: 2022-06-14 04:58 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து மசோதா தொடர்பாக உரையாற்றியதாக கூறப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு டெல்லி பயணம் மேற்கொண்டார். தற்போதைய நிலையில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் பா.ஜ.க. சார்பில் நடைபெற்று வருகிறது. மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளரை நிறுத்த ஒரு அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் பயணம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy:AsianetNews

Tags:    

Similar News