வைகுண்ட ஏகாதசி.. பெருமாள் கோயில்களில் அதிகாலையில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்!

Update: 2022-01-13 02:13 GMT

தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியின் மிகவும் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. அதே போன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.

அதன்படி இன்று அதிகாலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகார புறப்பாடு மற்றும் அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வரும் வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுசிறப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: Facebook

Tags:    

Similar News