வேலூர் அருகே கோவிலில் துணிக்கரம்: 10 பவுன் நகை, வெள்ளி கொள்ளை!

வேலூர் அருகே கோவிலின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி வெயில் முதலியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-24 06:09 GMT

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறும் அருகே உள்ள சாத்து மதுரையில் சின்னமலை மீது வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பெருமளவு பக்தர்களால் வருகை தரக்கூடிய சிறந்த முருகன் தலமாக காணப்படுகிறது. இங்கு நேற்று இரவு பைக்கில் வந்து கொள்ளையர்கள் கோவிலில் திருடி சென்று இருக்கிறார்கள். அவர்கள் கடப்பாரை மற்றும் கம்பிகள் கம்பிகளால் கோவில் போட்டு கதவுகளை உடைத்தார்கள்.


சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வெளியே வந்தனர். அதற்குள் முருகன் கோவிலில் இருந்த வெள்ளி, 10 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் உண்டியலில் உடைத்த பணம் மற்றும் திரௌபதி அம்மன் கோவில் சுவாமி சிலைகள் நகைகள் உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள். அவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் தங்கள் வண்டிகளில் அருகே வந்த பொழுது பொதுமக்களிடம் அந்த கும்பல் தப்பிக்கும் முயற்சி செய்தார்கள். மேலும் அவர்கள் செல்ல முடியாதபடி சுற்றுவளைத்தார்கள் பொதுமக்கள்.


ஆனால் கொள்ளையர்கள் கைகளில் கத்தி, கடப்பாறை போற்ற பயங்கரமான ஆயுதங்களை காட்டி விரட்டியபடி பைக்கில் தப்பி சென்றதால் பொதுமக்களால் அருகில் செல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் மீது கற்கள் கட்டைகளை வீசினார்கள். தடி ஒன்று சக்கரத்தில் பட்டு பைக் கீழே விழுந்தது. அதிலிருந்து இரண்டு பேரும் மற்றொரு பைக்கில் ஏறி இருட்டில் தப்பி சென்றனர். இதுகுறித்து வெள்ளூர் தாலுகா போலீசார் புகார் அளிக்கப் பட்டுள்ளது. போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்தனர். கொள்ளையர்கள் விட்டு சென்ற பைக் மற்றும் பொருளை மிட்டு செல்லப்பட்டுள்ளது. கோவிலில் இருந்த கைரேகைகள் செய்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஒரு சம்பவம் காரணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News