இந்தியாவுடனான நட்பை பலப்படுத்த அமெரிக்கா திட்டம்: பாதுகாப்புச் செயலரை இந்தியா அனுப்ப முடிவு!

Update: 2021-03-07 13:17 GMT

அமெரிக்காவில் புதியதாக பதவியேற்றுள்ள பிடென் நிர்வாகம் இந்தியாவுடன் எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு நட்பின் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, குறிப்பாக தேசிய பாதுகாப்பு விஷயத்தில், தொடரும் என்பதன் அறிகுறியாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் இந்த மாதம் இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், தனது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் லாயிட் ஆஸ்டினை இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு அனுப்புகிறார். அடுத்த நான்கு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான முக்கிய அடையாளமாக இது பார்க்கப்படுகிறது.


 முக்கியமாக, ஜெனரல் ஆஸ்டினின் வருகை புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு மார்ச் மூன்றாவது வாரத்தில் இருக்கும். அமெரிக்காவுடனான நெருங்கிய உறவைக் கொண்ட நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவரது இந்தியா பயணம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த காலத்திலிருந்தே இந்தியாவுடனான விஷயங்கள் முன்னேறியுள்ளன. ஜார்ஜ் டபிள்யூ புஷ், பாரக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது இந்த உறவு சிறப்பானதாக இருந்து வந்தது. தெளிவாக, ஜோ பிடன் ஆட்சியிலும் இது தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


ஜெனரல் ஆஸ்டின் அமெரிக்க இராணுவத்தின் ஓய்வு பெற்ற நான்கு நட்சத்திர ஜெனரல் ஆவார். அவர் அமெரிக்க மத்திய கட்டளைக்கு தலைமை தாங்கினார். ஈராக்கில் ராணுவத்தின் கட்டளைத் தளபதியாக இருந்தார் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

இந்தியா வரும் அவர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு மேற்கொள்வதோடு, இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத்தையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News