இந்திய எல்லையில் இனி கால் பதிக்க முடியாது! ஜம்மு-காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை ஜம்மு - காஷ்மீர் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், ஜம்மு - காஷ்மீர் பகுதியில் 2018 முதல் 2020 வரை 635 தீவரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 2018ஆம் ஆண்டில் 257 பேர், 2019ல் 157 பேர் மற்றும் 2020ல் 221 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 2021 பிப்ரவரி 15 வரை 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற மொத்தம் 42 பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, அவை பெரும்பாலும் எல்லையைத் தாண்டி நிதியுதவி செய்யப்படுகின்றன.
தீவிரவாத தாக்குதலில், 115 பொதுமக்கள் பயங்கரவாத வன்முறையால் உயிர் இழந்ததாகவும் உள்துறை அமைச்சரவை உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
"அரசாங்கம் 42 அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, அவர்களின் பெயர்களை 1967 சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் முதல் அட்டவணையில் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாதம் பெரும்பாலும் எல்லையைத் தாண்டி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் 61 ஊடுருவல்கள் பதிவாகியுள்ளன, இந்தோ-பங்களாதேஷ் எல்லையில் 1,045 ஊடுருவல்கள் மற்றும் இந்தோ-நேபாள எல்லையில் 63பதிவாகியுள்ளது.