2050 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு நிகராக வளர இருக்கும் இந்தியாவின் பொருளாதாரம்: மார்ட்டின் வுல்ப்

2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார அமெரிக்காவுக்கு நிகராக இருக்கும் என்ற பொருளாதார நிபுணர் மார்ட்டின் வுல்ப் கணித்துள்ளார்.

Update: 2023-07-22 15:30 GMT

இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிபுணரும் அந்த நாட்டில் வெளியாகும் பைனானன்சியல் டைம்ஸ் பத்திரிகையின் தலைமை பொருளாதார வர்ணனையாளருமான மார்ட்டின் வுல்ப் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஃபைனான்சியல் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-


இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீத ஜி.டி.பி வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று நான் கருதுகிறேன். நாட்டின் வங்கி இருப்பு நிலை குறிப்புகள் சரி செய்யப்பட்டு விட்டன. கடன் எந்திரம் நல்ல நிலையில் உள்ளது, நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதாரம் இரண்டும் வரவிருக்கும் ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா உண்மையில் வளர்ந்து வரும் பெரும் சக்தியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆர்வங்களும் ஒத்துப் போகின்றன. ஆனால் மதிப்புகள் எவ்வளவு தூரம் பகிரப்படுகின்றன என்பது இன்னும் திறந்த கேள்வியை . 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார அமெரிக்காவின் அளவுக்கு நிகராக இருக்கும். இவ்வாறு அந்த கட்டுரையில் மாட்டின் வுல்ப் குறிப்பிட்டார்.


SOURCE:DAILY THANTHI

Similar News