தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்ததாக ஒரு வீடியோ பரவி வருகிறது. வீடியோ சென்னையில் அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பேராசிரியர் அன்பழகன் தலைமையில் கருணாநிதியால் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது.
ஆனால் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியே மறைந்துவிட்டார். அப்படியிருக்கும் போது 1987 ஆம் ஆண்டு விழாவில் இந்திரா காந்தி எப்படி கலந்து கொண்டிருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது.
இதற்கு கருணாநிதி காலில் விழுந்தது இந்திரா காந்தி அல்ல. அவர் அறிஞர் அண்ணாவின் மனைவி ராணி என்றும் அவர் காலில் விழுந்துதான் கருணாநிதி ஆசி பெற்றார் என்றும் அவர் கருணாநிதியை விட வயதில் மூத்தவர் என்றும் தி.மு?க'வினர் விளக்கம் அளித்துள்ளனர்.
உண்மையில் இந்திரா காந்தியின் காலில் கருணாநிதி விழவே இல்லை, வீடியோவில் இருக்கும் பெண் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் மனைவி ராணி அம்மாள் என்பது தெரிய வருகிறது.
Input From: Oneindia