அண்ணாமலையின் நம்பிக்கையாக இருப்பதால் எஸ்.ஜி.சூர்யா பெயரில் பரவும் வதந்தி!

Update: 2023-03-11 00:15 GMT

ஒரு சில பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில், அண்ணாமலையுடன் ஒன்றாக அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியதால், பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை கேலி செய்யும் நோக்கில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.


 



பழைய புகைப்படம் ஒன்றை வைத்து, வேண்டுமென்றே போலியாக செய்தி தயாரித்து பகிரப்படுகிறது. அதில், பாஜகவில் இருந்து வெளியேறி, அதிமுகவில் இணைந்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மையல்ல.

வேவு பார்க்கும் தலைமையின்கீழ் கட்சிப்பணி செய்ய மனமின்றி, மிகவும் குழப்பமான மனநிலையில் காலம் கடத்திக்கொண்டு இருக்கிறேன்.எனது நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் சென்று விடலாம் எனும் எண்ணத்துடன் உள்ளேன்" என எஸ்ஜி சூர்யா கூறியதாக தெரிவிக்கப்பட்டது. 

இதுபற்றி கதிர் நியூஸ் மற்றும் எஸ்ஜிசூர்யா தரப்பை குறி வைத்து பகிரப்பட்ட தகவலாகும். 

பொறுப்பில் உள்ள தற்போதைய பாஜக நிர்வாகிகளை கேலி செய்யும் நோக்கில், சிலர் தயாரித்த போலியான செய்திதான் மேற்கண்ட ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.


Similar News