தவறான புகைப்படங்களை பரப்பிய காங்கிரஸ்அம்பலப்படுத்திய பா.ஜ.க தலைவர்.!

Update: 2021-03-05 01:45 GMT

காங்கிரஸ் தொடர்ச்சியாக நிலையான ஆட்சியை வைத்திருந்த அசாமில், முதன்முறையாக 2016 இல் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து மகத்தான வெற்றியைப் பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வின் பெரிய வெற்றியைக் கண்டு காங்கிரஸ் அதிர்ச்சியிலிருந்தது. தற்போது 2021 இல் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அசாமில் உள்ள மக்களை வெல்ல அனைத்தும் முனையையும் விட்டுவைக்காமல் தீவிரமாகக் காங்கிரஸ் செயல்பட்டு வருகின்றது.




 சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களின் நெருக்கடி பிரச்சனைகளைத் தீர்க்க அசாம் பச்சோ என்ற பக்கத்தை உருவாக்கினார். இந்த பக்கமானது பெரும்பாலும் மக்களை நெருங்கக் காங்கிரஸ் கட்சியால் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் அசாம் மக்களுடன் தங்களின் நெருக்கத்தைக் காண்பிக்கத் தனது பிரச்சார பக்கத்தில் டீ தோட்டத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் "அசாமில் டீ எஸ்டேட் தொழிலாளர்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படம் குறித்து உண்மையை பா.ஜ.க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டர் பக்கத்தில் சரிபார்த்தார். காங்கிரஸ் கட்சி தனது பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் உண்மையில் தைவான் டீ எஸ்டேட் உடையது என்பதைக் கண்டறிந்தார். மேலும் இதுகுறித்து opindiya சரிபார்த்த போதும், அசாம் டீ எஸ்டேட் தொழிலாளர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, உண்மையின் சீனாவின் தைவானைச் சேர்ந்த டீ எஸ்டேட் என்பதை உறுதி செய்தது.


சர்மா பகிர்ந்த புகைப்படத்தில், அந்த புகைப்படத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலையும் செய்யும் பெண்களின் உடையானது அசாமில் உள்ள கலாச்சாரத்தை விடுத்து வேறு கலரச்சாரத்தினர் அணியும் உடைபோன்று தென்பட்டது. அமைச்சர் அந்த புகைப்படம் தைவானைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டார்.



இதிலிருந்து காங்கிரஸ் ஊடக பிரச்சாரங்களுக்குத் தேக்கிவைக்கப்பட்டுள்ள டீ எஸ்டேட் புகைப்படத்தைப் பயன்படுத்தியது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதில் ஆச்சிரியமடையும் விதமாக, இந்த புகைப்படம் வெளியிட்ட இரண்டுநாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அசாமில் தேயிலை தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் வேலை செய்து புகைப்படங்களை எடுத்துக்கொன்றார். ஆனால் கட்சிக்கு அந்த புகைப்படங்கள் எதுவும் கிடைக்காமல் வெளிநாட்டிலிருந்து புகைப்படத்தை எடுக்கும் நிலைமை உள்ளது.

Similar News