ஜனாதிபதியை சிவப்பு கம்பளத்தில் நடக்க விடவில்லையா? வலம் வரும் தவறான புகைப்படம்.!
2021 பிப்ரவரி 24 இல் அகமதாபாத்தில் மொட்டெரா ஸ்டேடியம் தொடக்க விழாவின் போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் ராம்நாத் கோவிந் புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் உள்துறை அமைச்சர் அமீத் ஷா சிவப்பு கம்பளத்தில் நடப்பதையும், அதே நேரத்தில் ஜனாதிபதி நிலத்தில் நடப்பது போலும் தோற்றமளித்தது. பலர் இதனை ராம்நாத் கோவிந்த் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிவப்பு கம்பளத்தில் நடக்க அனுமதிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இஷ்ரத் கான் என்ற டிவிட்டர் பயனாளர் ஒருவர் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக சிவப்பு கம்பளத்தில் நடக்க வழிவிட்டு தரையில் நடக்கிறார், இதுபோன்று ஜனாதிபதி கிடைக்க நாடு கொடுத்துவைக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரு பேஸ்புக் பயனாளர் ஒருவர், இதே போன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த பதிவு குறைந்தது 6,200 முறை பகிரப்பட்டுள்ளது.
பல பேஸ்புக் பயனாளர்கள் இந்த புகைப்படத்தைப் பகிரத் தொடங்கினர். இது டிவிட்டர் பக்கத்திலும் வலம்வரத் தொடங்கியது. மொட்டெரா ஸ்டேடியம் தொடக்க விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த சிவப்பு கம்பளத்தில் நடக்க அனுமதிக்கப்படவில்லை என்பதே அனைவரதும் குற்றச்சாட்டு.