இலங்கையில் பா.ஜ.க பெயரில் கட்சி - பின்னணி என்ன ?

Update: 2021-03-10 03:21 GMT

சமூக ஊடகத்தில் தற்போது ஒரு செய்தி பரவலாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவை ஆளும் அரசியல் கட்சியான பாரதிய ஜனதா இலங்கையில் ஒரு கட்சி தொடங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டுடன் வலம்வந்து கொண்டிருக்கின்றது.


அந்த புகைப்படத்தில் இலங்கை பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக V முத்துஸ்வாமி நிர்ணயிக்கப்பட்டுள்ளார். இந்த புகைப்படம், பாரதீய ஜனதா புதிய கட்சியை இலங்கையில் ஆரம்பித்துள்ளதா என்று மக்களிடம் பல கேள்விகளை எழுப்பத் தொடங்கியது.

இந்தியாவை ஆளும் கட்சி அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளத்தில் ஒரு கிளையைத் தொடங்கி அவர்களின் உள்விவகாரத்தில் தலையிடுகின்றது என்று சீன மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஒளிபரப்பாளர்களும் சமீபத்தில் பல குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடகங்களின் செய்திகளும் மற்றும் அந்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் வலம்வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகைப்படம் உண்மையாக இருந்தாலும், இலங்கையில் தொடங்கப்பட்ட புதிய கட்சிக்கும் இந்தியாவின் பா.ஜ.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மார்ச் 6 இல், இலங்கை பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில்,வேலுஸ்வாமி முத்துசாமி, இலங்கையின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காக இலங்கை பாரதீய ஜனதா கட்சி(IBJK) உருவாக்குவது குறித்து அறிவித்தார்.

இந்த முடிவானது யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது. இது ஆங்கிலத்தில் இலங்கை பாரதீய ஜனதா கட்சி(SLBJP) என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதீய ஜனதா பக்சயா என்றும் வழங்கப்படுகின்றது. இதன் முக்கிய குறிப்பாக வேலுசாமி முத்துசுவாமி இந்திய பாரதீய ஜனதா கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டார். "மேலும் மோடியைப் பாராட்டி அவருடைய திட்டங்களுக்கான வெற்றியைப் பெறுகிறார் என்று கூறி, இந்திய பா.ஜ.க வுடன் தற்போதைய புதிய கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்று கூறினார்.

"இது குறித்துக் கடந்த ஆறு ஆண்டுகளாக முடிவு செய்து வந்துள்ளோம். அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தப்படவில்லை. நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். மேலும் இந்திய எங்களுக்கு உதவி செய்தால் அதுகுறித்து ஊடகத்துக்குத் தெரிவிப்போம்," என்றும் அவர் கூறினார்.

புதிய கட்சியைத் தொடங்கிய IBJK தலைவர் முத்துஸ்வாமி, கட்சி போரினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் மற்றும் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்தும் செயல்படும் என்று குறிப்பிட்டார். மேலும் கல்வி, விளையாட்டு, பன்மொழி திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த செயல்படும் என்றும் கூறினார். கட்சி குறித்த அறிக்கையை வெளியிட்டு, இது அனைத்தும் மக்களுக்கும் எந்த எனப்பாகுபாடுமின்றி செயல்படும் என்று கூறினார்.

மேலும் இக்கட்சி போரினால் நலிந்த தமிழ் மக்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும் மற்றும் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரித்து அவர்களின் நலனுக்காகச் செயல்படும் என்றும் கூறினார்.


மேலும் கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகள் மூலம் இலங்கையில் புதிதாக ஆரம்பித்துள்ள பாரதீய ஜனதாவுக்கு இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. மேலும் சமூக ஊடகத்தில் இதுகுறித்த செய்தி தவறாகப் பரவிவருகின்றது.

Similar News