சமூக ஊடகத்தில் தற்போது ஒரு செய்தி பரவலாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவை ஆளும் அரசியல் கட்சியான பாரதிய ஜனதா இலங்கையில் ஒரு கட்சி தொடங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டுடன் வலம்வந்து கொண்டிருக்கின்றது.
அந்த புகைப்படத்தில் இலங்கை பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக V முத்துஸ்வாமி நிர்ணயிக்கப்பட்டுள்ளார். இந்த புகைப்படம், பாரதீய ஜனதா புதிய கட்சியை இலங்கையில் ஆரம்பித்துள்ளதா என்று மக்களிடம் பல கேள்விகளை எழுப்பத் தொடங்கியது.
இந்தியாவை ஆளும் கட்சி அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளத்தில் ஒரு கிளையைத் தொடங்கி அவர்களின் உள்விவகாரத்தில் தலையிடுகின்றது என்று சீன மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஒளிபரப்பாளர்களும் சமீபத்தில் பல குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடகங்களின் செய்திகளும் மற்றும் அந்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் வலம்வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகைப்படம் உண்மையாக இருந்தாலும், இலங்கையில் தொடங்கப்பட்ட புதிய கட்சிக்கும் இந்தியாவின் பா.ஜ.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மார்ச் 6 இல், இலங்கை பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில்,வேலுஸ்வாமி முத்துசாமி, இலங்கையின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காக இலங்கை பாரதீய ஜனதா கட்சி(IBJK) உருவாக்குவது குறித்து அறிவித்தார்.
இந்த முடிவானது யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது. இது ஆங்கிலத்தில் இலங்கை பாரதீய ஜனதா கட்சி(SLBJP) என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதீய ஜனதா பக்சயா என்றும் வழங்கப்படுகின்றது. இதன் முக்கிய குறிப்பாக வேலுசாமி முத்துசுவாமி இந்திய பாரதீய ஜனதா கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டார். "மேலும் மோடியைப் பாராட்டி அவருடைய திட்டங்களுக்கான வெற்றியைப் பெறுகிறார் என்று கூறி, இந்திய பா.ஜ.க வுடன் தற்போதைய புதிய கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்று கூறினார்.