இலங்கையின் நிலை இந்தியாவிற்கும் வரும் என்று நியூஸ் 7 பெயரில் பரவும் செய்தி!

Update: 2022-08-26 05:52 GMT

இலங்கையில் ஏற்பட்டதைப் போன்று விரைவில் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. 



குறிப்பிட்ட செய்தியின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்வதற்காக, பேக்ட்செக் நிறுவனமான பேக்ட்கிரசண்டோ இதுபற்றி நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.

அவர், ''இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரை பயன்படுத்தி யாரோ வேண்டுமென்றே அவர்களது சொந்த கருத்தை வைத்து இத்தகைய போலிச் செய்தியை தயாரித்துள்ளனர்,'' எனக் குறிப்பிட்டார்.

இந்த செய்தி நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

 


Similar News