ஆருத்ரா மோசடியில் பாஜக நிர்வாகி ரூ.84 கோடி பெற்றார் என தினமலர் செய்தி வெளியிட்டதா?

Update: 2023-04-19 01:00 GMT

ஆருத்ரா மோசடி விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டி, பால் கனகராஜ் உள்ளிட்டோர் ரூ.84 கோடி பெற்றதாக பா.ஜ.க நிர்வாகி அலெக்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 




தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகி ஒப்புதல்! பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜர். அமர்பிரசாத் ரெட்டி, பால் கனகராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் ஹரிஷிடம் ரூ.84 கோடியை பெற்றதாக ஒப்புதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதை தினமலர் வெளியிட்டதா என்று பார்க்கையில் ஏப்ரல் 12, 2023ம் தேதி இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் தினமலர் வெளியிடவில்லை.

இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என தினமலர் தரப்பும் உறுதி செய்துள்ளது. அது போலியானது என்று உறுதி செய்தனர்.

ஆருத்ரா வழக்கு விசாரணை நடந்துகொண்டே இருக்கிறது.  பாஜக நிர்வாகிகள் ஹரிஷிடமிருந்து ரூ.84 கோடி பெற்றதாக பாஜக நிர்வாகி அலெக்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று தினமலர் நாளிதழ் வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

Similar News