இதெல்லாம் தேவை தானா? RSS பெயரில் தி.மு.க ஐடி விங் பரப்பி வரும் பொய் செய்தி!

Update: 2023-10-22 03:11 GMT

கோயிலில் குண்டு வைப்பதற்காக புர்கா அணிந்து வந்த இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்த ஆண் ஒருவர் பெங்களூரில் கைது என திமுக ஐடி விங் பரப்பி வருகிறது. 

உண்மை என்ன?

இந்த படத்தை ஆய்வு செய்ததில் அது 2017ம் ஆண்டு எகிப்தில் பெண் வேடமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிந்தது.

எகிப்து கெய்ரோவில் குழந்தையைக் கடத்த முயன்றவரை பொது மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

அந்நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் பெண் வேடமிட்ட ஆண் என்பது தெரியவந்துள்ளது. அவர் குழந்தையைக் கடத்துவதற்கு முன்னர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். 

இதிலிருந்து கோயிலில் குண்டு வைக்க புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ். நபர் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.


Similar News