2021 NEET தேர்வு செபட்ம்பர் 5 இல் நடத்தப்படுகின்றதா? வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-07-07 01:45 GMT

இந்த ஆண்டு செப்டம்பரில் 5ஆம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வான NEET நடத்தப்படவுள்ளதாக ஒரு வைரல் கூற்று வலம்வருகின்றது. மேலும் இதனை NTA வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 "NEET 2021, இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் பேனா மற்றும் காகித முறையில் செபேட்ம்பர் 5 ஆம் தேதி நடப்படவுள்ளது," என்று அந்த வைரல் கூற்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் NTA இயக்குநர் வினீத் ஜோஷி இந்த வைரல் கூற்றுப் போலியானது என்பதை உறுதி செய்தார். இதுபோன்ற அறிக்கை எதுவும் பிரீமியர் சோதனை மையம் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் வட்டாரத்தின் படி, இந்த ஆண்டு JEE மற்றும் NEET தேர்வு நடத்துவதற்கான திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக NEET தேர்வு செபேட்ம்பர் 13 இல் நடத்தப்பட்டது.


எனவே தற்போது NEET செப்டம்பர் 5 இல் நடத்தப்படவுள்ளது என்ற வைரல் செய்தி தவறானது ஆகும். இதுகுறித்த செய்தியை அதிகாரப்பூர்வ தளங்களில் சரிபார்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source: இந்தியா டிவி

Similar News