தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்தடை- அண்ணாமலை பெயரில் பரவும் தகவல்!

Update: 2022-04-29 03:42 GMT

தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்தடை செய்யப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரில் ஒரு நியூஸ் கார்டு பரவி வருகிறது. 

ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு டிசைனில் பரவி வரும் அந்த பதிவில், மின்சாரத்தை நிறுத்து! அரசுக்கு வேண்டுகோள். தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் காப்புக் கட்டிய நாள் முதல், திருவிழா முடிந்து அந்த ஊர்களுக்கு விருந்தினர்களாக வந்துள்ள விருந்தாளிகள் அவரவர் ஊருக்குத் திரும்பும் நாள் வரை அந்த ஊருக்கு மின்சாரம் வழங்கக் கூடாது. இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல. – பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி என்று கூறப்பட்டுள்ளது. 




உண்மையில், இந்த நியூஸ் கார்டு ஜூனியர் விகடன் தரப்பில் வெளியிடவில்லை. இது குறித்து அந்த ஊடக நிர்வாகத்தினர் உண்மை செய்திகளை கண்டறியும் நிறுவனத்திடம் அதனை உறுதிபடுத்தியுள்ளனர். 

எனவே, அண்ணாமலை பெயரை பயன்படுத்தி, போலியான நியூஸ் கார்டை தயாரித்து, ஒரு மீது தவறான பிம்பத்தை கட்டமைக்கும் நோக்கில்  பகிர்ந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

Similar News