ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தாரா? உண்மை இதோ!
பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதில் 2014 முதல் பாஜக தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒரு பிரச்சினை, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தை டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி சொன்னதாக பரவி வரும் தகவல்.
ஆகஸ்ட் 3, 2022 அன்று, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான குலாப் சிங் தனது ட்வீட்டில், ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் மோடியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதியை இன்னும் நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், கெஜ்ரிவாலின் உறுதிமொழிகளை மக்கள் எப்படி நம்பத் தொடங்கினர் என்று கூறினார்.
இந்தியா டுடேயின் அறிக்கையின்படி , எச்.கே. சிங் என்ற வழக்கறிஞர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவருக்கும் எதிராக ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி, 2020 அன்று வழக்குத் தொடர்ந்தார், ஒவ்வொரு நபரின் வங்கியிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வதாக உறுதியளித்து பொதுமக்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டினார்.
உண்மை சோதனை
ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்தாரா என்பதை அறிய, தேடல்களை துவங்கினோம். 2014 மக்களவைத் தேர்தல் பேரணிகளில் இருந்து சில வீடியோ கிளிப்புகள் கிடைத்தன.
நவம்பர், 2013, கான்கேரில் (சத்தீஸ்கர்) நடந்த பேரணியின் வீடியோவைக் கண்டோம். இந்த காணொளி முழுவதும் எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக கூறி வந்ததற்கு மாறாக வித்தியாசமான கதையைச் சொல்கிறது. பிரதமர் மோடி தனது உரையில், அப்போதைய UPA அரசின் தவறுகளை சாடினார், "ஒரு முறை, இந்த மோசடியாளர்கள் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைத்துள்ள பணத்தை, நாம் திரும்பக் கொண்டு வந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியன் வங்கி கணக்கில் 15 முதல் ரூ. 20 லட்சம் வரும் அளவுக்கு அங்கே பணம் உள்ளது எனக்கூறி இருந்தார். மேலும், 2014ஆம் ஆண்டுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.