அவ்வளோ வெறி? இன்னும் வாக்கு எண்ணிக்கையே தொடங்காத வார்டில், பாஜக வேட்பாளர் 8 வாக்கு மட்டுமே பெற்றதாக போலி செய்தி பரப்பும் ஊடகங்கள்!
பா.ஜ.கவின் முக்கிய பிரமுகரான உமா ஆனந்தன் சென்னையில் 134 வது வார்டில் போட்டியிட்ட நிலையில் வெறும் 8 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளதாக ஒரு சில கட்சி சார்பு ஊடகங்கள் போலி செய்தி வெளியிட்டு வருகின்றன.
உண்மையில் அங்கு வாக்கு எண்ணிக்கையே தொடங்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவு வெளியிடப்படும் இணையதளத்தில் இது குறித்த தகவல் வெளிவாக உள்ளது. அப்படி இருப்பது தெரிந்தும் வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கங்களுக்காக ஒரு சில ஊடகங்கள் போலி செய்தி வெளியிட்டு வருகின்றன.
சமயம் ஊடகம் பரப்பிய போலி செய்தி:
ஜீ செய்திகள் பரப்பிய வதந்தி:
கலைஞர் செய்திகள் போலி செய்தி பதிவிட்டு நீக்கியது: