தி.மு.க-வில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை என்று பகிரப்படும் தகவல்!

Update: 2023-11-18 04:01 GMT

‘’திமுக.,வில் தலித்துகளுக்கு ஒரு சதவீதம் கூட மரியாதை இல்லாமல் நடத்துகின்றனர். இதை கண்டும் காணாமல் தொல் திருமாவளவன் ஏன் இவர்களுக்காக சொம்படித்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் தனது இனத்தை பணத்திற்காக விற்றுவிட்டாரா’’ என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 




உண்மை என்ன?

பெரம்பலூரில் கல் குவாரிகளை ஏலம் விட மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக விண்ணப்பிக்க, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம் வந்த பாஜக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் பாஜகவைச் சேர்ந்த பெரம்பலுார் கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதுதவிர, அங்கிருந்த பாஜகவினர் மற்றும் போலீசாரும் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.  தாக்குதலில் பாதிக்கப்பட்ட கலைச்செல்வன் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். 

பட்டியல் இன சமூக மக்களுக்காக குரல் கொடுக்கும் விசிக, இதற்கெல்லாம் வாய் திறக்காதா என கேள்வி எழுப்பி பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Similar News