பெண் வாக்காளர்கள் இதை செய்தால் தான் வாக்களிக்க அனுமதிப்பார்களா? உண்மை என்ன..

Update: 2024-05-22 16:04 GMT

லோக்சபா 2024-க்கான 5வது கட்ட வாக்குப்பதிவு தற்போது பல மாநிலங்களில் மே 20, 2024 அன்று நடந்து வருகிறது. கடைசி இரண்டு கட்டங்கள் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்படும். குறிப்பாக ஓட்டு போடும் பொது மக்களுக்கு தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வைரலாக்கி வருகிறது அதிலும் குறிப்பாக பெண் வாக்காளர்கள் வாக்கு செலுத்த வரும் பொழுது தங்கள் கையில் உள்ள நெயில் பாலிசி ரிமூவ் செய்த பிறகு தான் வர வேண்டும் என்ற செய்தி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.


வைரலான செய்தியில், "அனைத்து பெண்களின் கவனத்திற்கும், தயவு செய்து விரல்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்றவும், இல்லையெனில் நீங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள்". வாட்ஸ்அப்பில் பெண் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முன் தங்கள் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்ற வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வாட்ஸ்அப்பில் "பல முறை அனுப்பப்பட்டது" என்ற வைரல் செய்தி கூறுகிறது. கோரிக்கை போலியானது.


மேலும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பெண்கள் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முன் தங்கள் விரல் நகங்களில் பூசப்பட்ட நெயில் பாலிஷை அகற்றுமாறு எந்த அறிவுறுத்தலையும் அறிவிக்கவில்லை. மேலும் இது முற்றிலும் போலியான தகவல் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News