பிரதமர் மோடி பற்றி பாடகர் ஸ்ரீனிவாஸ் இவ்வாறு கூறினாரா... உண்மை பின்னணி என்ன...

Update: 2024-05-25 11:42 GMT

ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். நம்மவர் படத்தில் மகேஷ் இசையமைப்பில் "சொர்கம் என்பது நமக்கு" பாடல் இவருக்கு முதல் பாடலாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மின்சாரக் கனவு படத்தில், 'மானா மதுரை' என்னும் பாடல் மூலம் பிரபலமானார். தற்போது வரை 3000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்நிலையில் இவர் கூறியதாக இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக செய்து பரவி வருகிறது. தங்களை கடவுளின் படைப்பு என நினைப்பவர்களுக்கு சிகிச்சை தேவை பாடகர் ஸ்ரீனிவாஸ் கருத்து கூறியதாக பல்வேறு நபர்கள் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இது பற்றி அவர்கள் கூறும் பொழுது, "தங்களைக் கடவுளின் படைப்பு என நினைப்பவர்களுக்கு சிகிச்சை தேவை" என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் இன்ஸ்டாகிராமில் கூறியதாக பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "யாராவது தன்னை கடவுளின் சிறந்த படைப்பு என நினைத்தால், அவர்களின் நோய்க்கு சிகிச்சை உதவி தேவைப்படுகிறது. மனிதநேயத்தை தவிர வேறேதும் முக்கியமோ அல்லது சிறப்பு வாய்ந்ததோ கிடையாது. மேலும் தங்களை கடவுளாக நினைப்பவர்களுக்கு மனநோய் இருப்பதாக அவர் கூறியதாக" சமூக வலைத்தளங்களில் பலர் செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் தான். நான் குறிப்பிடாத தகவல்களை பலர் வேண்டுமென்று பகிருவதாக பாடகர் ஸ்ரீனிவாஸ் எக்ஸ் வலைதள பக்கங்களில் கருத்தை பகிர்ந்து இருக்கிறார். எனவே அதற்கு மறுப்பு தெரிவித்து நான் இந்த தகவல்களை யாரைப் பற்றியும் கூறவில்லை. வேண்டுமென சிலர் தான் கூறியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என தெரிவித்தார். 


ஆனால் முதலில் பாடகர் ஸ்ரீனிவாஸ்  கூறியதாக செய்தியை வெளியிட்டது கலைஞர் செய்திதான். பிரதமர் மோடி பற்றி பாடகர் ஸ்ரீனிவாஸ் சொல்லாத ஒன்றை சொன்னதாக செய்தி வெளியிட்டு பாடகர் மறுப்பு தெரிவித்த பின்னர், மன்னிப்பு தெரிவிக்காமல் டெலிட் செய்த "கலைஞர் செய்திகள்" என்று பல்வேறு பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கோபத்தை முன் வைத்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News