மக்களே உஷார்.. இந்திய சுங்கத்துறை பெயரில் நடக்கும் மோசடி உண்மையா?

Update: 2024-06-17 09:37 GMT

இந்திய சுங்க அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு மோசடி செய்யும் நபர்கள் நாடு முழுவதும் பொதுமக்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை ஏமாற்றிய பல்வேறு சம்பவங்கள் செய்தி இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த மோசடிகள் முதன்மையாக தொலைபேசி அழைப்புகள் அல்லது SMS போன்ற டிஜிட்டல் வழி முறைகளைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அச்சத்தை ஊட்டி பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


மேலும் இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மத்திய அமைச்சகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பொது விழிப்புணர்வு மூலம் இந்த மோசடிகளை எதிர்கொள்வதற்காக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செய்தித்தாள் விளம்பரங்கள், பொது மக்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்கள்,சமூக ஊடக பிரச்சாரங்கள் மூலம் ஒரு பல்முனை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக உள்ளூர் நிர்வாகம் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் கள அமைப்புகள் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகின்றன. இவ்வாறான மோசடிகளுக்கு பலியாவதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.

இந்திய சுங்க அதிகாரிகள் தனிப்பட்ட கணக்குகளில் வரி செலுத்துவதற்காக தொலைபேசி, SMS, மின்னஞ்சல் மூலம் பொதுமக்களை ஒருபோதும் தொடர்பு கொள்வதில்லை. மோசடி இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் முறைகேடுகளை எதிர்கொண்டால், அழைப்புகளைத் துண்டிக்கவும். இத்தகைய செய்திகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம். தனிப்பட்ட தகவல்களை பகிரவோ அல்லது வெளியிடவோ அல்லது அடையாளம் மற்றும் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்காமல் தெரியாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு பணம் அனுப்பவோ வேண்டாம். இதுபோன்ற நிகழ்வுகளை உடனடியாக  www.cybercrime.gov.in அல்லது இலவச உதவி எண் 1930 க்கு தெரிவிக்கவும். உங்கள் குடும்பத்தை சார்ந்த ஒருவரை போதைப்பொருள் வழக்கில் நாங்கள் கைது செய்துள்ளோம்.அவரை விடுவிக்க வேண்டுமென்றால் எங்களுக்கு குறிப்பிட்ட தொகை பணம் அனுப்புங்கள் என்று மிரட்டி சில சமூகவிரோதிகள் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கின்றன.இது போன்ற எந்த வித பணத்தையும் மத்திய,மாநில அரசு துறையினர் கேட்பதில்லை.இந்த மாதிரி யாராவது உங்களை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிக்க முயல்வார்கள். அவர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். Input & Image courtesy: News

Tags:    

Similar News