ஓடும் அரசுப் பேருந்தின் கூரை பறந்ததால் பொள்ளாச்சியில் பரபரப்பு.. வீடியோ பின்னணி..

Update: 2024-06-20 10:30 GMT

"ஓடும் அரசு பேருந்தின் கூரை பறந்தால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மேலும், விடியல் ஆட்சியின் மற்றுமொரு அவலம்" என்று சமூக ஊடக பயனாளர் ஒருவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ உண்மை குறித்து தற்போது பார்க்கலாம். தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு வருகிறது. குறிப்பாக புதிய பேருந்துகளை வாங்காமலும், பழைய பேருந்துகளை சரியான நேரங்களில் சரி செய்யப்படாமல் இருப்பதும் இந்த நிலைமைக்கு காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 


பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன.பல்வேறு சிறப்பு திட்டங்களில் இலவமாக மக்கள் பயணிக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. தற்போது போக்குவரத்து கழகங்கள் மிக மோசமான சூழலில் தள்ளாடி கொண்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால் போக்குவரத்து கழகங்கள் தற்போது நஷ்டத்தில் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.


இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ உண்மையா? என்பது குறித்து ஆராயப்பட்டது. அது உண்மையான ஒரு நிகழ்வு தான். பொள்ளாச்சி நோக்கி போய்க்கொண்டிருந்த ஒரு அரசு பேருந்தில் தான் அதனுடைய மேற்கூரை பறந்து அந்தரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எதுவும் ஆகவில்லை அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பி இருக்கிறார்கள்.  

Input & Image courtesy:News

Tags:    

Similar News