பிரதமர் மக்கள் மருந்தகம் திட்டத்தின் மேல் "முதல்வர் மருந்தகம்" என ஸ்டிக்கர் ஒட்டியதா திராவிட மாடல்?

Update: 2024-08-19 08:38 GMT

பிரதமரின் மக்கள் மருந்தகம்: பிரதமரின் மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா - PMBJP) என்பது இந்திய நாட்டின் மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விற்பதற்காக இந்திய அரசின் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இவை பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா கேந்திரா (PMBJK) என்றழைக்கப்படும் மக்கள் மருந்தகத்தின் மூலம் விற்பனையில் ஈடுபடுகின்றன. பிரதமரின் பெயரில் மலிவு விலை மருந்து திட்டம், மருந்தகக் கடைகளில் பொதுவான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைச்சகத்தால் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.


சந்தை விலையைவிட இங்கு மருந்துகளின் விலை 50% முதல் 90% வரை குறைவு:

பிரதமர் மக்கள் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலை, சந்தை விலையைவிட 50% முதல் 90% வரை குறைவாக இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறார். உதாரணமாக, புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்து, சந்தையில் ரூ.6,500-க்கு விற்கப்படும் நிலையில், மக்கள் மருந்தகம் மையங்களில் ரூ.800-க்கே கிடைக்கிறது. இதற்கு முன்னதாக இருந்ததைவிட, தற்போது, சிகிச்சைக்கான செலவு குறைந்துள்ளது. மக்கள் மருந்தகங்களால் நாடு முழுவதும் இதுவரை ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் ரூ.2,200 கோடியை சேமித்துள்ளனர்.


இந்நிலையில் பிரதமர் மோடி அவர்களின் மக்கள் மருந்தகம் திட்டத்தினை புதியதாக முதல்வர் மருந்தகம் என தமிழகத்தில் திமுக அரசு துவங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து கூறும் பொழுது, மது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் "மக்கள் மருந்தகம்" திட்டத்தின் மேல் "முதல்வர் மருந்தகம்" என ஸ்டிக்கர் ஒட்டிய திராவிட மாடல்" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News