கர்நாடக காங்கிரசை விமர்சித்த மகாராஷ்டிரா முதல்வர்.. பின்னணி உண்மை என்ன.?

Update: 2024-09-15 17:02 GMT

கர்நாடக மாநிலம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்த நிலையில், நடந்தது மதக்கலவரம் அல்ல. தற்செயலாக நடந்த சம்பவம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். மராத்வாடா பகுதியில் உள்ள தாராஷிவில் நடந்த பேரணியில் பேசிய ஷிண்டே அவர்கள் கலந்து கொண்டார் அப்பொழுது இங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றி அரசியல் செய்பவர்கள் தங்களுடைய ஆளும் மாநிலங்களில் பிரச்சனை நடந்தால் அதை அரசியலாகாதீர்கள் என்று கூறுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று மகாராஷ்டிரம் முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். அண்டை மாநிலமான மாண்டியா நகரத்தில் ஊர்வலத்தின் போது கணபதி சிலையை தடுத்து நிறுத்திய போலீசார், சிலையை காவல் நிலையத்தில் வைத்திருந்ததை அடுத்து, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடுமையாக சாடினார்.


இங்கு மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை உடைக்கப்பட்டதில் அரசியல் செய்பவர்கள், கர்நாடகாவில் கணபதி விழா கொண்டாட்டங்களின் போது தடைகளை உருவாக்க காரணம் என்று அவர் கூறினார். ஊர்வலத்தை மர்மநபர்கள் தாக்கியதால், மாண்டியா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் சமூக ஊடகங்களில் வைரலான கணபதி சிலையைக் குறிப்பிட்டு, மகாராஷ்டிரா முதல்வர், காங்கிரஸ் அரசுக்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை முன்வைத்து இருந்தார். சத்ரபதியின் பெயரில் மக்கள் அரசியல் செய்கிறார்கள். கர்நாடகாவில் கணபதி விழா கொண்டாட்டங்களை நிறுத்தியதற்கு சிவாஜி மகாராஜ் தான் காரணம். கர்நாடகாவில் கணபதி சிலையை காங்கிரஸ் அரசு கைது செய்தது. கணபதி சிலை வைத்திருப்பது தொடர்பான கோரிக்கைகளை கர்நாடக காவல்துறை இன்னும் சரியாக விளக்கம் கொடுக்கவில்லை.


சிந்துதுர்க் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியலில் ஈடுபட்டன. இருப்பினும், கர்நாடகாவில் கணபதி சிலையை போலீசார் கைது செய்தனர் என்று ஷிண்டே மேலும் கூறினார். சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசை விமர்சித்தார். இடஒதுக்கீடு குறித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அறிக்கையையும் மகாராஷ்டிர முதல்வர் விமர்சித்தார். இந்த காங்கிரஸ்காரர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலையை என் சகோதரிகள் இப்போது செய்வார்கள் என்று கூறினார்.

Input & Image courtesy: The Commune News

Tags:    

Similar News