கோவில் பணத்தை அரசு செலவினங்களுக்கு பயன்படுத்துவது கூட தெரியாத நிதியமைச்சர் - பி.டி.ஆர் பரிதாபங்கள்
தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியை தமிழக அரசு பயன்படுத்துகிறது. இதனை நிறுத்த வேண்டும் எனும் வகையில் பாஜகவினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பாஜகவினர் சமூகவலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் தியாகராஜன் தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறைக்கு ஆண்டு பட்ஜெட்டில் நூற்றுக்கணக்கான கோடிகளை ஒதுக்குகிறது. கோவில்களில் இருந்து 1 ரூபாயை கூட எடுப்பதில்லை என அவரே டிவிட்டரில் கூறி இருந்ததார்.
சொல்லி சில நாட்கள் கூட ஆகாத நிலையில், கோயில் நிதியை எடுத்து பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.
கோவில் பணத்தை அரசாங்கம் நலத்திட்டங்களுக்காக செலவிடுவதை கூட தெரியாத நிதியமைச்சராக பிடிஆர் இருக்கிறாரே என நெட்டிசன்கள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக பதிவிடுகின்றனர்.