பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவி வரும் தகவல்!

பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்றாரா யோகி ஆதித்யநாத்?

Update: 2022-01-08 10:45 GMT

பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்று உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பசுஞ்சாண வறட்டியை எரித்தால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக தந்தி தொலைக்காட்சியின் கீழ் நியூஸ்கார்டு திமுக ஆதரவாளர்களால் பகிரப்படுகிறது.



உண்மை சரிபார்ப்பு:

பசுஞ்சாண வறட்டியை எரித்து கொரோனாவை குணப்படுத்தலாம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக நியூஸ்கார்டுக்கு கீழ் தந்தி டிவி லோகோ இடம்பெற்றுள்ளது. அவர்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தேடி பார்த்தோம். அதில் வைரலாகி வரும் தகவல், எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. "உத்தரபிரதேசத்தில் 2017ல் இருந்து கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை" என்று யோகி ஆதித்யநாத் கூறியதை  எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே காணலாம்.



தந்தி தொலைக்காட்சியே வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News