ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் செயல்திறன் குறித்து பிரதமர் ஆய்வு.!

Update: 2021-06-04 12:46 GMT

கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டன. மேலும் அவை 2021 ஆம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலையில் துவங்க உள்ளது. எனவே ஜூலை மாதத்தில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் நம் வீரர்களின் தயார் நிலை மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்தும் பிரதமர் மோடி அவர்கள் ஆய்வு செய்தார். 


இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால், ஒலிம்பிக்கிற்கு இந்தியா எவ்வாறு தயாராகியுள்ளது என பிரதமர் மோடி ஆய்வு செய்தார். தொற்றுநோய்க்கு மத்தியில் தடகள வீரர்களுக்கு தடையற்ற பயிற்சியை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், ஒலிம்பிக் ஒதுக்கீட்டை வெல்ல சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது, விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்படுதலின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு தெரிவித்தனர்.


இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டியில் 26 பாரா விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 16 பாரா விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பயணிக்கும் தகுதி பெற்ற வீரர்கள், தகுதி பெற வாய்ப்புள்ள வீரர்கள், அணியின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டாயம் விரைவில் தடுப்பூசி போட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டார்.நமது ஒலிம்பிக் குழுவை இந்தியர்கள் அனைவரின் சார்பாக ஊக்குவிக்கவும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் ஜூலை மாதம் காணொளி வாயிலாக அவர்களுடன் இணைவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

Tags:    

Similar News