ஆந்திராவை கடுமையாக தாக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று.!

Update: 2021-06-10 12:47 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு அடுத்தபடியாக வேகமாகப் பரவி வரும் தொற்று நோயாக கருப்பு பூஞ்சை தற்பொழுது மாறி வருகிறது. தொற்று நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்புப் பூஞ்சை மிகவும் ஆபத்தான அரியவகை பூஞ்சை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டு வருகிறது.


மேலும் அத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. அதற்கு உரிய வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருந்து வருகிறது. 


இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மட்டும் சுமார் 1,955 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 1,301 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக அம்மாநில மருத்துவ மற்றும் சுகாதார முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால் தற்பொழுது தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்த வருவதன் காரணமாக மக்கள் பயத்தில் உள்ளார்கள்.


Similar News