காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் வெறியாட்டம் - அப்பாவி மக்கள் மீது தாக்குதல்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2021-10-19 01:30 GMT

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 2 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் இரவு நேரங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குல்காம் பகுதியில் உள்ள வான்போ பகுதியில் பயங்கரவாதிகள் பீகார் மாநில தொழிலளரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பாதுக்காபு படையினர் அங்குள்ள தொழிலாளர்களை முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். காஷ்மீரில் கடந்த சில தினங்களாக வெளிமாநில தொழிலாளர்கள் மீதும் அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதில் 10 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

Source: Puthiyathalaimurai

Tags:    

Similar News