பிரதமரை தவறாக பேசிய நபரை பேருந்தில் இருந்து உதைத்து தள்ளிவிட்ட பெண்கள்!

Update: 2022-01-14 05:29 GMT

பேருந்து சென்று கொண்டிருந்தபோது பெண்களை கேலி செய்து வந்ததும் மட்டுமின்றி பிரதமர் மோடி பற்றியும் தவறாக பேசிய நபரை பெண்கள் ஒன்று சேர்ந்து அடித்து, துவைத்து பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூரிர் பேருந்து நிலையத்தில் இருந்து மேடகல்லி வழியாக ஒரு அரசு பேருந்து சென்றுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த ஒருவர் பெண் பயணிகளை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். அது மட்டுமின்றி, பிரதமர் மோடியை தவறாகவும் பேசியுள்ளார். இதனை அங்கு இருந்த பெண் பயணிகள் கண்டித்துள்ளனர். அதற்கு அந்த நபர் பெண்களை கொலை செய்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து, பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இது பற்றிய வீடியோ தற்போது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. தைரியமாக அந்த நபரை அடித்து கீழே தள்ளிய பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News