மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள ஆண்களின் நடத்தை குறித்து, பகிரங்க கருத்து கூறும் கேரள கம்யூனிஸ்ட் பெண் அமைச்சர்!

Update: 2022-03-04 14:35 GMT

கட்சியிலுள்ள ஆண் உறுப்பினர்கள், பெண் உறுப்பினர்கள் மீது நடந்து கொள்ளும் விதம் தவறாக இருப்பதாக கேரள பெண்  அமைச்சர் பிந்து குற்றச்சாட்டு எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.


"இந்திய நாட்டின் சிறந்த மாநிலம் கேரளா! இந்திய நாட்டில்  மக்களுக்கான ஆட்சியை தருபவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்!" என்று பல பிம்பங்களை இந்தியர்கள் மத்தியில் இடதுசாரிகள் பரப்பி வந்தாலும், சில சமயங்களில் அவர்கள் கட்டிவைத்த பிம்பங்கள் உடைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு கொச்சியில் நடைபெற்றது. அப்பொழுது கேரள மாநில மேல்நிலை கல்வித் துறை அமைச்சர் பிந்து, கட்சியிலுள்ள ஆண்களின் நடத்தை குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். பெண் உறுப்பினர்கள் மீது ஆண்  உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் தவறாக இருப்பதாக கூறியுள்ளார்


இதனால் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அவப்பெயர் உருவாக தொடங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

Hindu Post


Similar News