காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிதியை சாதுர்யமாக தடுத்த அமித்ஷா

Update: 2022-04-22 02:11 GMT

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பு எடுத்து அவர்களுக்கு செல்லும் நிதியை தடுத்து நிறுத்தியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தேசிய புலனாய்வு அமைப்பின் 13வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் பயங்கரவாதத்தை விட மோசமான மனித உரிமை மீறல் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம்தான் பயங்கரவாதம். மனிதர்களை பாதுகாக்க பயங்கரவாதத்தை வேறோடு அழிப்பது நல்லது.

பிரதமர் மோடி அரசு பயங்கரவாதிகளுக்கு கடுகளவு கூட சகிப்புத்தன்மை காட்டக்கூடாது என்ற கொள்கையை பின்பற்றி செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் முற்றிலும் பயங்கரவாதத்தை விரட்டுவதற்காக பணியாற்றி வருகிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிந்துள்ளது. எனவே யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை முற்றிலும் கட்டுப்படுத்த இது உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News