அக்னி வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய சலுகை - என்ன அது?

Update: 2022-06-18 10:43 GMT

அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்ப்படும் அக்னிவீரர்களுக்கு துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாவ உத்தரவை பிறப்பித்துள்ளது.

நமது ராணுவத்தில் 'அக்னி வீரர்கள்' என்கின்ற புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இதில் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் சேர்த்துக்கொளளப்படுவார்கள். இவர்கள் தங்களின் பணிக்காலத்தை முடித்த பின்னர் 25 சதவீதம் பேர் முப்படைகளில் இணைத்துக்கொள்ளப்படுவர்.

இத்திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் அரசியல் காரணங்களால் இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைப்பது, பொதுசொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:The Economics Times

Tags:    

Similar News