பாலியல் புகாரில் சிக்கிய சோனியாகாந்தியின் தனிச்செயலர் வயது என்ன தெரியுமா? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சோனியாகாந்தியின் தனிச்செயலர் பி.பி.மாதவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தனிச்செயலர் பி.பி.மாதவன் மீது பாலியல் வன்முறை புகார் எழுந்துள்ளது. பி.பி.மாதவனுக்கு 71 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.பி.மாதவன் மீது அளித்துள்ள புகாரில் அந்தப் பெண் கூறியதாவது, எனது கணவர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் போர்டுகள், பதாகைகள் கட்டுவது போன்ற பணிகளை செய்து வந்தார். அவர் 2020ல் இறந்துவிட்டார் அவர் இறந்ததும் குடும்பத்தை நடத்த வேலை தேட ஆரம்பித்த பொழுது பி.பி. மாதவனை தொடர்பு கொண்டேன் பின்னர் வாட்ஸ் அப்பில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள மறைவான இடத்தில் காரில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்தார், பின்னர் சுந்தர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் என் விருப்பம் இல்லாமல் பாலியல் உறவு கொண்டார்' என தன் புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.