பொது சிவில் சட்டம் அசாமில் கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இதனால் ஊடுருவல்காரர்கள் 4 முறை திருமணம் செய்து கொள்வது தடுக்கப்படும். அசாம் சட்டப்பேரவைக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அசாமின் கோல்பாரா மாவட்டம் துத்னோயில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதுகுறித்து அமித் ஷா பேசினார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் பொது சிவில் சட்டத்தின் முழுமையான அமலாக்கம் சாத்தியமாகும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.