ஈரான் தூதரகம் இந்தியர்கள் அளித்த நன்கொடையால் 40 டன் மருந்துகளை கொள்முதல் செய்திருக்கிறது. ஆனால் அவற்றால் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இதில் ஈரானில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மட்டுமல்லாமல், 27,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போர் தீவிரமடையும் சூழலில் ஈரானில் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஈரான் தூதரக அதிகாரி, தற்போது இந்தியாவில் இருந்து 40 டன் மருந்துகளை கொள்முதல் செய்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களால் எங்களால் ஈரானுக்கு மருந்துகளை அனுப்பி வைக்க முடியவில்லை என கூறினார்.