ஈரானுக்கு மருந்து அனுப்புவதில் சிக்கல்!!

Update: 2026-04-05 09:29 GMT

ஈரான் தூதரகம் இந்​தி​யர்​கள் அளித்த நன்கொடை​யால் 40 டன் மருந்​துகளை கொள்​முதல் செய்​திருக்​கிறது. ஆனால் அவற்றால் தொடர்ந்து சிக்​கல் நீடிக்​கிறது. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது.


இதில் ஈரானில் இது​வரை 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்​தது மட்டுமல்லாமல், 27,000 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். போர் தீவிரமடை​யும் சூழலில் ஈரானில் மருந்​துகள், மருத்​துவ உபகரணங்​களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.


ஈரான் தூதரக அதி​காரி, தற்​போது இந்​தி​யா​வில் இருந்து 40 டன் மருந்​துகளை கொள்​முதல் செய்​திருக்​கிறோம். ஆனால் அமெரிக்​கா​வின் தொடர் தாக்​குதல்​களால் எங்​களால் ஈரானுக்கு மருந்​துகளை அனுப்பி வைக்க முடிய​வில்​லை என கூறினார். 

Tags:    

Similar News