இந்தியா-வங்கதேச உறவு!! வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!!
By : Bharathi Latha
Update: 2026-04-10 12:45 GMT
வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலூர் ரஹ்மான், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை புதுடெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, ஜெய்சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில், நமது இரு தரப்பு உறவை அதன் பல்வேறு அம்சங்களிலும் வலுப்படுத்துவது குறித்து பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கலீலூர் ரஹ்மானின் இந்திய பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.