கிசான் நிதியில் 11.3 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்: பிரதமர் மோடி மகிழ்ச்சி!

Update: 2022-04-10 13:58 GMT

விவசாயம் பற்றிய திட்டங்களினால், விவசாயிகள் அனைவருக்கும் புதிய பலம் கிடைத்து வருவதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விவசாயிகளினால் நாடு பெருமை அடைகிறது. அவர்கள் அனைவரும் வலுவாக இருந்தால் மட்டுமே புதிய இந்தியா மேலும் வளமானதாக மாறும்.

மேலும், பிரதமர் கிசான் நிதி மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களினால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், 11.3 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 1.82 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News