"மாநிலங்களிடம் தற்போது 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்ப்பு" - மத்திய அரசு!

Update: 2021-07-06 01:13 GMT

இந்தியாவில் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி சில வாரங்களுக்கு முன்பு அறிவித்ததை போல், மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்குகிறது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசும், 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளும் பெறுகின்றன.


இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து மத்திய அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அந்த செய்திக்குறிப்பில் கூறியதாவது "மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இதுவரை 36 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 980 ‛டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 34 கோடியே 95 லட்சத்து 74 ஆயிரத்து 408 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  2 கோடியே  01 லட்சத்து 96 ஆயிரத்து 572 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன." என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News