ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட 29 பழங்கால பொருட்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

Update: 2022-03-21 11:00 GMT

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இதனை பிரதமர் மோடி (மார்ச் 21) இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து 29 இந்திய சிலைகள் உள்ளிட்ட மிகவும் பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. அதன்படி சீர்காழி அருகே உள்ள பழங்கால கோயிலில் காணாமல் போன சிலையும் அடங்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட மாநிலங்களில் இருந்து காணாமல் போன சிலைகளும் மீட்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News