தமிழகத்தில் வசித்த 3 தீவிரவாதிகள், மைசூர் நீதிமன்ற வெடிகுண்டு வழக்கில் குற்றவாளிகள் என என நீதிமன்றம் தீர்ப்பு !
2016 இல் மைசூர் நீதிமன்ற வெடிகுண்டு வழக்கில் 3 அல்கொய்தா தீவிரவாதிகள் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பளித்துள்ளது.
2016இல் மிகவும் பேசுபொருளானது, மைசூரு நீதிமன்ற வெடிப்பு சம்பவம். அவ்வழக்கில் திருப்பமாக மூன்று அல்கொய்தா தீவிரவாதிகள் குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தால் கடந்த வெள்ளி கிழமையன்று தீர்ப்பளித்துள்ளது. அம்மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
நைனார் அபாஸ், அப்துல் கரீம் தாவூத் மற்றும் சுலைமான் இம்மூவரும் மைசூர் மாவட்ட பொது கழிவறையில் வெடிகுண்டு வைத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.