தவறுதலாக இந்திய எல்லையில் நுழைந்த 3 வயது பாகிஸ்தான் குழந்தை - இந்திய ராணுவம் என்ன செய்தது?

Update: 2022-07-02 08:14 GMT

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 3 வயது குழந்தையை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.

இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் நாட்டின் குழந்தைகள் பாதை மாறி நுழைந்து விடுகின்றனர். இது போன்ற சமயங்களில் அவர்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டு பத்திரமாக அந்நாட்டின் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

அதே போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது. நேற்று (ஜூலை 1) சுமார் 7 மணியளவில் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த குழந்தையை, பெரோஸ்பூர் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டு பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News