வங்கதேசத்துடன் நட்பு உருவாகி 50 வருடம் நிறைவு: பிதரமர் மோடி பெருமிதம்!

இந்தியா அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்பாகவே இருந்து வருகிறது. அதே போன்று வங்கதேசத்துடனும் நட்பு உருவாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து இரண்டு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-12-07 06:38 GMT

இந்தியா அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்பாகவே இருந்து வருகிறது. அதே போன்று வங்கதேசத்துடனும் நட்பு உருவாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து இரண்டு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுடன் ஒன்றாக இருந்த வங்கதேசம் தனி நாடாக கடந்த 1971 டிசம்பர் 6ம் தேதி இந்தியா அங்கீகரித்தது. தனிநாடு கேட்டு நடந்த போரில் வங்கதேசத்துக்கு இந்தியா மிகப்பெரிய உதவிகளை செய்து, தனிநாடாக அங்கீரகித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு நாடுகளின் நட்பு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை மைத்ரி திவாஸ் என்று இரண்டு நாடுகளும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் வங்கதேசத்தில் மைத்ரி திவஸ் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் நம் நட்பு வலுப்பெறுவதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை நினைத்து பார்க்கிறேன்.எனவே இரண்டு தரப்பு உறவு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து, இரண்டு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: Twiter


Tags:    

Similar News