பா.ஜ.க தொண்டரின் தாய் என்பதற்காக 70 வயது மூதாட்டி மீது திரிணாமூல் காங்கிரஸ் கொலைவெறி தாக்குதல்!

Update: 2021-03-01 09:01 GMT

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். தற்போது வயதான பெண்மணி என்றுகூட பாராமல் தங்கள் முரட்டுத் தனத்தை அவர்களிடம் காண்பித்துள்ளனர். பா.ஜ.கவின் தொண்டரான கோபால் மஜூம்தர் மற்றும் அவரது 70 வயது தாயை TMC குண்டர்கள் கண்மூடித் தனமாகத் தாக்கியுள்ளனர்.


இந்த நிகழ்வானது வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடந்துள்ளது. அந்த கும்பல் நள்ளிரவில் கோபால் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளது. பின்னர் அவர்கள் கோபால் மற்றும் அவரது தாயைக் கண்மூடித் தனமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு இருவரது முகமும் வீங்கிப்போய் இருந்தது. "அவர்கள் என் பின்னால் அடித்தனர், மேலும் முகம் கை காலில் கூட அடித்தனர், மேலும் இதனை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டினர்," என்று கோபால் தாய் தெரிவித்தார்.

இந்த போன்று அந்த வார்டில் உள்ள பா.ஜ.க தொண்டர்களில் பல வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பா.ஜ.க குற்றம் சாற்றியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு உள்ளூர் பா.ஜ.க உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது மற்றும் காவல்துறையினர் அங்குக் குவிந்தனர். தான் பா.ஜ.க வில் வேலை செய்வதற்காகத் தாக்கியதாக கோபால் குற்றம்சாட்டியுள்ளார். வழக்கம் செய்த தாக்குதல்களை ஒப்புக்கொள்ளாத TMC இந்த தாக்குதலையும் மறுத்துள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள TMC MLA இந்த சம்பவத்தை இரு குடும்ப பிரச்சனை என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்று தாக்குதல் சம்பவங்கள் அரசியல் வன்முறையாக மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த கொடூர தாக்குதலை மும்பையில் உத்தவ் தாக்கரே வின் கார்ட்டூன் புகைப்படத்தை பரப்பியதற்காக ஓய்வு பெற்ற கடற்படை வீரரைத் தாக்கிய சம்பவத்துடன் நெட்டிசென்கள் பலர் ஒப்பிடுகின்றனர்

Similar News