காஷ்மீரில் ரூ.82 கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் நிறைவு.. மத்திய அமைச்சர் தகவல்..

Update: 2023-10-09 01:42 GMT

பிரதமரின் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் சாலைப் போக்குவரத்துக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு சாலைகள் இந்தியாவில் நவீனமய மாக்கப்பட்டு மற்றும் சாலைகள் இல்லாத பகுதிகளுக்கு சாலைகளை அமைக்கும் பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறது. மக்கள் விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட வருகிறது.  


மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு-காஷ்மீரில் ரூ .82 கோடி மதிப்பீட்டில் இரு வழி 395 மீட்டர் மரோகே சுரங்கப்பாதையுடன் இணைந்து 250 மீட்டர் இருவழி வழித்தட கட்டுமானம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த உள்கட்டமைப்பு தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் ராம்பன் முதல் பனிஹால் பிரிவில் அமைந்துள்ளது என்று கட்கரி கூறியுள்ளார். பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த 645 மீட்டர் பிரிவு, பயண தூரத்தை 200 மீட்டர் குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீருக்கு அருமையான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வழங்கப்படுவதாகவும், இது இந்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், ஒரு முதன்மை சுற்றுலாத் தலமாக அதன் ஈர்ப்பை அதிகரிக்கிறது என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News