குவ்ஹாத்தியில் DRDO உருவாக்கிய கோவிட் மருத்துவமனையை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்!

Update: 2021-06-18 14:36 GMT

இந்த கொரோனா காலத்தில் DRDO பல கோவிட் மருத்துவமனைகளை உருவாக்கி அதை மக்களின் செயல்பாட்டிற்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் குவ்ஹாத்தியில் DRDOவால் அமைக்கப்பட்ட கோவிட் மருத்துவமனையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டார்.


இது குறித்து அவர் கூறும்போது "குவ்ஹாத்தியில் உள்ள சிறுசஜாயில், கொரோனா காலத்தில் மக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கோவிட் மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டேன். DRDO மற்றும் அசாம் அரசு இணைந்து இந்த 316 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையை மிகவும் குறுகிய காலத்தில் சிறப்பாக அமைத்துள்ளனர். மேலும் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் அசாம் மாநிலத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு, அதிலிருந்து மீண்டு வர இந்த மருத்துவமனை மிகவும் உதவியாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News